திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில், மீஞ்சூர் ஒன்றியக்குழு நிதியிலிருந்து, நலத்திட்ட பணிகள் துவக்கம்…
1 min read

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பழவேற்காடு, கோட்டைக்குப்பம், லைட் ஹவுஸ் ஊராட்சிளுக்கு ரூபாய் 26 இலட்சம் மதிப்பிலான சாலை மற்றும் உயர் கோபுர விளக்குகள் துவக்க விழா நடைபெற்றது. ரூபாய் 17 இலட்சம் மதிப்பீட்டில் கோட்டைக் குப்பம் ஊராட்சியில், சிமெண்ட் கல் பதித்த சாலை அமைக்க அடிக்கல் நாட்டு விழாவும், லைட் ஹவுஸ் ஊராட்சி திருமலை நகர், பழவேற்காடு மீன் மார்க்கெட் மற்றும் குளத்துமேடு, தோணிரேவு இணைப்பு சாலையிலும் தலா 3 இலட்சம் மதிப்பிலான உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கப்பட்டது.

மீஞ்சூர் ஊராட்சிக்குழு பெருந்தலைவர் ரவி அவர்கள் ஏற்பாட்டில் வழங்கப்பட்ட நிதிகளில் மேற்கொள்ளப்பட்ட இப் பணிகளை ஒன்றிய குழு பெருந்தலைவர் ரவி அவர்களே, துவக்கி வைத்தார். நிகழ்ச்சியின் முடிவில் மாவட்ட சிறுபான்மை நல பிரிவு அமைப்பாளர் முகம்மது அலவி ஏற்பாட்டில் கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. இதனை மீஞ்சூர் ஒன்றிய திமுக செயலாளர்கள் வல்லூர் என்.எஸ்.கே.ரமேஷ்ராஜ், சுகுமார் ஆகியோர் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட,ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
நிழல்.இன் – 8939476777
