திருவள்ளூர் மாவட்டத்தில், அமைப்பு சாரா தொழிலாளர்கள் உடனடியாக பதிவு மற்றும் புதுபித்துகொள்ள மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…
1 min read
அரசின் தொழிலாளர் துறையின் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு 17 தொழிலாளர் நல வாரியங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. நல வாரியங்களில் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு கல்வி, திருமணம், மகப்பேறு, ஓய்வு ஊதியம், இயற்கை மரணம், மற்றும் விபத்து மரணம் மூலமாக ஏற்படும் உயிரிழப்புக்கு உதவித் தொகை போன்றவை தகுதியின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகின்றது.

திருவள்ளூர் மாவட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் உட்பட கட்டுமானம் உடலுழைப்பு அமைப்பு சாரா ஓட்டுனர்கள், சலவை, முடி திருத்துபவர், கைத்தறி, விசைத்தறி, மண் பாண்டம், தெருவியாபாரம், உள்ளிட்டு அமைப்பு சாரா தொழில்களில் ஈடுபட்டு வரும் பதிவு பெறாத தொழிலாளர்கள் தொடர்புடைய நல வாரியங்களில் புதிதாக பதிவு செய்து கொள்ளும் ஏற்கனவே பதிவு செய்தவர்கள் தங்களது பதிவை புதுப்பிக்க https://labour.TN.gov.in/ என்ற இணையதளத்தை பயன்படுத்தி கொள்ளலாம், பதிவு பெறாத அமைப்புசாரா தொழிலாளர்கள் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி வயது சான்று, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, பணி சான்றிதழ், கிராம நிர்வாக அலுவலர் சான்று, உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றம் செய்து நல வாரியத்தில் உறுப்பினர்களாக தங்களை பதிவு செய்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. விண்ணப்பதாரர் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருந்தல் வேண்டும். அதற்கான விண்ணப்பங்களை இணைய தளத்தின் மூலம் சமர்ப்பித்து பிறகு தகுதி வாய்ந்த தொழிலாளர்களுக்கு 30 நாட்களுக்குள் பதிவு எண், விவரம், அவர்களுடைய கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் அனுப்பி வைக்கப்படும். அந்த பதிவு எண் மூலம் பதிவு அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அந்த பதிவு எண் மூலம் பதிவு அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த வாய்ப்பினை அனைத்து தொழிலாளர்களுக்கும் பயன்படுத்திக் கொள்ளுமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மகேஸ்வரி ரவிகுமார் அவர்கள் அறிவித்துள்ளார்.

செய்தியாளர் – மகேஷ்
நிழல்.இன் – 8939476777