திருப்பதி ஏழுமலையான் கோயிலில், வைகுண்ட ஏகாதசி அன்று முதல் 10 நாட்கள் சொர்க்கவாசல் திறக்கப்படும்…
1 min read
வைஷ்ணவர்களின் முக்கிய விரத நாளான வைகுண்ட ஏகாதசி பெருமாள் கோயில்களில் சிறப்பாக கொண்டாடப்படும். அன்று சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வில் பங்கேற்றால் அனைத்து பாவங்களும் நீங்கி வைகுண்டம் அடைவதாக ஐதீகம்.

அந்த வகையில் ஆந்திர மாநிலம் திருப்பதியிலும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வு சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக சொர்க்கவாசல் திறப்பு குறித்து திருமலையில் தேவஸ்தானத்தின் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது சொர்க்கவாசல் திறப்பது குறித்து மடாதிபதிகள், பீடாதிபதிகளிடம் ஆலோசனை கேட்கப்பட்ட பின்பு, 10 நாட்கள் சொர்க்கவாசல் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

“டிசம்பர் 25 முதல் ஜனவரி 3-ஆம் தேதி வரை சொர்க்கவாசல் திறக்கப்படும்,” என தெரிவிக்கப்பட்டது. கொரோனா பரவலால் பக்தர்களுக்காக இந்த வசதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது, என திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.

G.பாலகிருஷ்ணன்
நிழல்.இன் – 8939476777