திருவள்ளூரில் கிரிக்கெட் விளையாடிய போது, சட்ட கல்லூரி மாணவர் மார்பில் பந்து விழுந்தில் உயிரிழந்தார்…
1 min read
திருவள்ளூர் அருகே புன்னப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன்(24). ஆந்திராவில் சட்ட கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் நண்பர்களுடன் புன்னப்பாக்கம் பகுதியில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது கிரிக்கெட் பந்தை கேட்ச் பிடிக்க முயன்றுள்ளார்

அப்போது பந்து லோகனாதனின் கையில் பிடிபடாமல் மார்பில் விழுந்துள்ளது. அதில் பலத்த அடிபட்டு மயங்கி விழுந்துள்ளார். உடனே, லோகநாதனை அவருடைய நண்பர்கள் ஆட்டோவில் ஏற்றி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். லோகநாதனை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே லோகநாதன் உயிர் இழந்துவிட்டார், என தெரிவித்தனர். அதை கேட்ட நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த புல்லரம்பாக்கம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, லோகநாதனின் உடலை பிரேத பரிசோதனை செய்யவில்லை, எனக்கூறி திருவள்ளூர் அரசு மருத்துவ மனையின் எதிரில், லோகநாதனின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், மருத்துவர்கள் இல்லாததாலும், பிரேத பரிசோதனை செய்வதில் தாமதம் ஏற்பட்டதாகவும், உடனடியாக பரிசோதனை ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் கூறியதை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது. கிரிக்கெட் விளையாட சென்ற சட்ட கல்லூரி மாணவர் கிரிக்கெட் பந்து மார்பில் பட்டு இறந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நிழல்.இன் – 8939476777