பெண்கள் பாதுகாப்பிற்க்கு ஆதரவாக நிற்க்கும், திருவள்ளுர் எஸ்.பி அரவிந்தன்…
1 min read
திருவள்ளுர் மாவட்டம் சோழவரம் அருகே உள்ள ஒரக்காடு கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், கடந்த சில தினங்களுக்கு முன், அப்பகுதியில் உள்ள வயல்வெளிக்கு தனியாக சென்றுள்ளார். அப்போது, அதே ஊரைச் சேர்ந்தவரும், உறவினருமான, அஜித் குமார் (25) என்ற இளைஞர், அவரைப் பின் தொடர்ந்து போய் கத்தியைக் காட்டி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார்.

அதை சற்றும் எதிர்பார்க்காத அந்த இளம்பெண், இளைஞரிடமிருந்து தப்பிக்க முயன்றுள்ளார். ஆனால் அந்த இளம்பெண் தப்பிக்க முயற்சி செய்த போது தவிற்க்க முடியாத சூழலில், இளைரிடம் இருந்த கத்தியைப் பிடுங்கி, தற்காப்புக்காக அஜித்குமாரைக் கத்தியால் குத்தியுள்ளார். அதில், படுகாயம் அடைந்த இளைஞர், சிறிது நேரத்தில் அதே இடத்திலேயே இறந்து போனார். இதை தொடர்ந்து, காவல் நிலையத்திற்கு நேரில் சென்று நடந்த சம்பவத்தை எடுத்து கூறிய, அந்த இளம் பெண் சோழவரம் போலிசில் சரண் அடைந்தார். உடனடியாக சம்பவ இடத்திற்க்கு நேரில் சென்று, பொன்னேரி டி.எஸ்.பி கல்பனா தத் விசாரனை நடத்தினார்.

பின்னர், சோழவரம் போலிசார் இளைஞரின் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து இளம்பெண்ணிடம் நடத்திய விசாரணையில், தற்காப்புக்காக மட்டுமே அஜித்குமாரை, அவர் கத்தியால் குத்தியதும், அவருக்கு கொலை செய்யும் எண்ணம் இல்லை, என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இளம்பெண் மீது இந்திய தண்டனைச் சட்டம் 302இன் கீழ் பதிவு செய்த கொலை வழக்கை, ஐபிசி பிரிவு 100 ஆக மாற்றி, இவ்வழக்கின் விசாரணை அதிகாரி அந்த இளம் பெண்ணை விடுவித்தார்கள்.

நிழல்.இன் – 8939476777