திருவள்ளுர் அருகே காக்களூரில், சமபந்தி விருந்து, மாவட்ட ஆட்சியர் பொன்னையா கலந்து கொண்டார்…
1 min read
மாவட்டம், காக்களுர்
ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் ஆலய வளாகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் ஆண்டுதோறும் தீண்டாமை பழக்கத்தை மக்களிடமிருந்து நீக்கி சமுதாய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்திற்காக சமபந்தி விருந்து நடத்தப்படும்.

அதே போல் இந்தாண்டும், நடத்தப்பட்டது. அதில், திருவள்ளுர் மாவட்ட ஆட்சித் தலைவர் பா.பொன்னையா, அவர்கள் கலந்து கொண்டு, அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொண்ட சமபந்தி விருந்தில் உணவு அருந்தினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் வெ.முத்துசாமி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் க.அ.முகமது ரசூல், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சரவணன், காக்களுர் ஊராட்சி மன்றத் தலைவர் சுபத்ரா ராஜ்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – மகேஷ்
நிழல்.இன் – 8939476777