மதுரையில் பூ விற்கும் பெண்ணிடம் பணம் வழிப்பறி செய்த திருடர்களை சிங்கம் பட பாணியில் சீரிப்பாய்ந்து பிடித்த காவல் ஆய்வாளர்!
மதுரை டவுன்ஹால் பகுதியில் பூ விற்கும் பெண்ணிடம் இரண்டு இளைஞர்கள் பணப்பையை திருடிக்கொண்டு தப்பிச்சென்றனர். அப்போது ரோந்து பணியில் இருந்த திடீர்நகர் காவல் ஆய்வாளர் காசிராஜன், சினிமா பாணியில் அவர்களை விரட்டிச்சென்று பிடித்தார்.

மதுரை ரயில்நிலையம் எதிரேயுள்ள டவுண்ஹால் ரோடு பகுதியில் சாலையோரமாக பெண் ஒருவர் பூ கட்டி விற்பனை செய்துகொண்டிருந்துள்ளார். இந்நிலையில் மதுரை வில்லாபுரம் ஹவுசிங்போர்டு பகுதியை சேர்ந்த அப்துல்ஷேக் மற்றும் அருண் ஆகிய இருவரும் பூ விற்றுக்கொண்டிருந்த பெண்ணிடம் இருந்த பணப்பையை பிடுங்கி கொண்டு தப்பிச்சென்றனர்.
இதனை பார்த்து அந்த பெண் கூச்சலிட அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டுகொண்டிருந்த திடீர்நகர் காவல்நிலைய ஆய்வாளர் காசிராஜன் மற்றும் தலைமை காவலர் முத்துப்பாண்டி ஆகியோர் சிங்கம் பட சூர்யாபோல இருவரையும் விரட்டி சென்று பிடித்தனர்.
இதனையடுத்து அவர்களிடமிருந்த பணப்பையை மீட்டு பூ விற்கும் பெண்ணிடம் ஒப்படைத்தனர். இதனை பார்த்த பொதுமக்கள் காவல் ஆய்வாளர் காசிராஜன் மற்றும் தலைமை காவலர் முத்துப்பாண்டி ஆகிய இருவரையும் பாராட்டினர்.
இந்நிலையில் பணத்தை பறித்தசென்ற இருவரையும் திடீர்நகர் காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- செய்தியாளர் வி.காளமேகம், மதுரை
நிழல்.இன் / 8939476777