சொக்கநாதன் புத்தூர் கிராமத்தில் புரட்டாசி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் திருவிழா

இராஜபாளையம் அருகே சொக்கநாதன் புத்தூர் கிராமத்தில் புரட்டாசி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் திருவிழா : ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

சொக்கநாதன் புத்தூர் கிராமத்தில் புரட்டாசி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் திருவிழா

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன் புத்தூர் இந்து நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் புரட்டாசி பொங்கல் தேர் திருவிழா கடந்த ஆறாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக  அம்மனுக்கு பால், பன்னீர், தேன், இளநீர் போன்ற 16 வகை அபிஷேகங்கள் நடைபெற்றது அதன் பின் அம்மன் சிறப்பு பூஜைகள் நடைபெற்று பின்பு கொடியேற்றி காப்பு கட்டு விழா நடைபெற்றது .

நேற்று இரவு குடை சப்பரத்தில் அம்மன் வீதி உலா நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றனர். இன்று இன்று காலை 10 மணி அளவில் ஏ கே ஆர் குழும தலைவர் காமராஜ் மற்றும் குடும்பத்தினர் திருத்தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

தேரோட்ட திருவிழாவை முன்னிட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி தேருக்கு பின்னால் விழுந்து வழிபாடு செய்து தங்களுடைய நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.

- செய்தியாளர் வி.காளமேகம்
நிழல்.இன் / 8939476777