ராஜபாளையம் சத்யா வித்யாலயா பள்ளியில் தீபாவளி திருநாள்!
ராஜபாளையம் சத்யா வித்யாலயா பள்ளியில் தீபாவளி திருநாள் விழா கொண்டாடப்பட்டது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள சத்யா வித்யாலயா பள்ளியில் தீபாவளி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு சத்யா வித்யாலயா பள்ளிக்குழுமத் தலைவர் குமரேசன், மேனேஜர் டிரஸ்டி சித்ரா குமரேசன், துணை நிர்வாகி அரவிந்த் குமரேசன் தலைமை வகித்தனர்.
பள்ளி முதல்வர் சௌந்தரி, ஆலோசகர் பாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மாணவி ஸ்ரீமதி வரவேற்றார். தீபாவளி திருநாளில் மாணவர்கள் புத்தாடை உடுத்தியும், பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது எப்படி என அறிவுரை வழங்கப்பட்டது. முடிவில் மாணவி ரோகிணி நன்றி கூறினார்.
- செய்தியாளர் வி.காளமேகம்
நிழல்.இன் / 8939476777