சசிகலா புஷ்பா தங்கியிருந்த அரசு குடியிருப்புக்கு சீல் வைத்த அரசு அதிகாரிகள்!

சசிகலா புஷ்பா நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது புதுடெல்லியில் அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த அரசு குடியிருப்பை பதவிக்காலம் முடிந்து கடந்த 2 வருடங்களாக காலி செய்யாமல் இருந்ததால், அரசு அதிகாரிகள் சசிகலா புஷ்பாவின் உடமைகளை வெளியே தூக்கி வைத்துவிட்டு குடியிருப்புக்கு சீல் வைத்தனர்.

சசிகலா புஷ்பா தங்கியிருந்த அரசு குடியிருப்புக்கு சீல் வைத்த அரசு அதிகாரிகள்!

சசிகலா புஷ்பா தூத்துக்குடி மாநகராட்சியில் அதிமுக சார்பாக  மேயராக 2011 முதல் 2014 வரை இருந்தவர் பின்னர் அதிமுகவில் அதிக நெருக்கம் காரணமாக 2014 ல் அதிமுக சார்பாக ராஜ்யசபாவில் பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார்.

பின்னர் அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பிரச்சினை காரணமாக அதிமுகவில் இருந்து நீக்கபட்டார். இந்த சர்ச்சை அடங்குவதற்கு முன் ராமசாமி என்பவரை சசிகலா புஷ்பா திருமணம் செய்து கொண்டார். இதிலும் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.

இந்நிலையில் தற்போது தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவராக உள்ளார் சசிகலா புஷ்பா. இதிலும் கடந்த மாதம் நடைபெற்ற நிகழ்ச்சியில் சக கட்சி உறுப்பினரால் பாலியல் ரீதியான துன்புறுத்தல் ஏற்பட்டு பெரும் சர்ச்சை எழுந்தது.

இந்நிலையில் ராஜ்யசபா நாடாளுமன்ற உறுப்பினராக நியமனம் செய்யபட்ட பின்னர் இவருக்கு டில்லியில் தங்குவதற்கு  மத்திய அரசால் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது. அவரது பனிகாலம் முடிவடைந்த 2 வருடம் ஆகியும் இதுவரையில் அரசு குடியிருப்பை காலி செய்யாததால் அவரது குடியிருப்பை முறையாக காலி செய்யும் படி அரசு அவருக்கு பல முறை நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் அவர் அரசு குடியிருப்பை காலி செய்யாததால் அவரது வீட்டில் உள்ள பொருட்களை வெளியே வைத்து விட்டு அவரது குடியிருப்பிற்க்கு அரசு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

சசிகலா புஷ்பா தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவராக உள்ள நிலையில், அவரது அரசு குடியிருப்பை அரசு அதிகாரிகள் சீல் வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

- செய்தியாளர் வி.காளமேகம்
நிழல்.இன் / 8939476777